திருமாலை ஆண்டான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

thirumalai-andan

திருநக்ஷத்ரம் : மாசி  மகம்
அவதார ஸ்தலம் : திருமாலிருஞ்சோலை
ஆசார்யன் : ஆளவந்தார்
சிஷ்யர்கள் :  எம்பெருமானார் (கிரந்த காலக்ஷேப  சிஷ்யர்)

ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர்  மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார்.

ஆளவந்தார் தமது ஐந்து பிரதான சிஷ்யர்களை அழைத்து அவர்களை எம்பெருமானாருக்கு நமது சம்பிரதாயத்தின் பல அம்சங்களையும் கற்றுத்தருமாறு பணித்தார். அந்த விதத்தில் திருமாலை ஆண்டானுக்கு திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களைக் கற்றுத்தரும் பொறுப்பு திருமாலை ஆண்டானுக்கு வழங்கப்பட்டது. ஆளவந்தார் பரமபதம் அடைந்தபொழுது ஸ்ரீரங்கம் வந்தடைந்த எம்பெருமானாரை, திருக்கோஷ்டியூர் நம்பி திருமாலை ஆண்டானிடம் அழைத்துச் சென்று அவரிடம் நம்மாழ்வார்  அருளிய திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை அறிந்து கொள்ளுமாறு பணித்தார்.

திருமாலை ஆண்டான் எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களை எல்லாம் தாம் ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்டபடி ஸாதித்தார். அப்போது இடையிடையே சில பாசுரங்களுக்குத் தமக்குத் தோன்றிய அர்த்தங்களை (ஆண்டானின் அர்த்தங்களிலிருந்து வேறுபட்டவை) எம்பெருமானார் எடுத்துரைத்தார். அது கேட்டு திருமாலை ஆண்டான் எம்பெருமானார் தனக்குத் தோன்றிய அர்த்தங்களை  எல்லாம் கூறுகிறார் தவிர அவையெல்லாம் ஆளவந்தாரிடம் தாம் கேட்டவை அல்ல என்று எண்ணினார்.  ஒருமுறை திருவாய்மொழி 2.3.3  “அறியாக் காலத்துள்ளே” பாசுரத்தில் அர்த்தத்தை விளக்கும்போது,  ஆழ்வார்,  எம்பெருமான் தனக்கு நிறைந்த ஞானத்தைக் கொடுத்தருளியபோதும் தம்மை இந்த உடலோடே இந்த ஸம்ஸாரத்திலேயே இருக்க வைத்துவிட்டாரே என்று வருத்தப்படுவதாக கூறினார் . ஆனால் எம்பெருமானார் அதை வேறு விதமாகப் பார்த்து, (பாசுரத்தின் இரண்டாவது வரியை முதலில் வைத்து ) அர்த்தத்தைக் கூறினார். அதாவது, ஆழ்வாரின்  இந்த பதிகம் (10 பாசுரங்கள்) அவருடைய ஆனத்தையே காட்டுவதாகவே அமைந்துள்ளது. அதில் இப்பாசுரத்தில் ஆழ்வார் தாம் இதுவரை சம்சாரத்தில் உழன்றுகொண்டிருந்ததாகவும் ஆனால் திடீரென்று எம்பெருமான் தன்னை வாழ்த்திவிட்டதாகவும் சந்தோஷத்தோடே கூறுவதாகவும் சொன்னார்.  இதைக்கேட்டு வருத்தமுற்ற ஆண்டான் தாம் இதுவரை இந்த மாதிரி அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டது இல்லை என்றும், எம்பெருமானார் புதிது புதிதாக அர்த்தங்களை தாமே உருவாக்குகிறார் என்றும் அது எவ்விதம் விச்வாமித்ரர் திரிசங்கு மஹாராஜாவிற்காக ஒரு புதிய லோகத்தைத் தோற்றுவித்தாரோ அது போன்று உள்ளது என்று கூறினார். அத்துடன் அவருக்குத் தன் காலக்ஷேபத்தையும் நிறுத்திவிட்டார். அதைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி உடனே திருக்கோஷ்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் விரைந்து ஆண்டானிடம்   நடந்ததைக் கேட்டறிந்தார். அதற்கு எம்பெருமானார் தொடர்ந்து தாம் ஆளவந்தாரிடம் கேட்டறியாத புது புது அர்த்தங்களை சொல்லிக்கொண்டு வருவதாக ஆண்டான் கூறினார். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி முழுவதும் சொன்னபோது, நம்பி தாம் அந்த அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டிருப்பதாகவும், அந்த பாசுரத்திற்கு அது நியாயமான விளக்கமே என்றும் கூறினார். மேலும் அவர் எம்பெருமான் எவ்வாறு சாந்தீபனியிடம் கற்றுக்கொண்டாரோ அது போன்றே ராமானுஜரும் உம்மிடம் திருவாய்மொழி கற்றுக்கொள்கிறார் என்றும், மேலும் ஆளவந்தாரின் ஹ்ருதயத்தில் இல்லாத எந்தக் கருத்தையும் அவர் சொல்ல மாட்டார் என்றும்,  எனவே ராமானுஜருக்குத் தெரியாத எதையும் நீர் கற்றுக் கொடுப்பதாக எண்ண வேண்டாம் என்றும்  கூறினார்.  பின்பு அவர் ஆண்டானையும் பெரிய நம்பியையும் எம்பெருமானாரின்  மடத்துக்கு அழைத்துவந்து ஆண்டானிடம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும்படி எம்பெருமானாரிடம் வேண்டிக் கொண்டார். தொடர்ந்து வேறு  ஒரு பாசுரத்திற்கு எம்பெருமானார் ஆண்டானின் அர்த்ததிலிருந்து மாறுபட்ட ஒரு அர்த்தத்தைக் கூறும்போது, ஆண்டான் எம்பெருமானாரிடம் நீர் ஆளவந்தாரைச் சந்திக்காமலே உமக்கு இந்த அர்த்தங்கள் எல்லாம் எவ்வாறு தெரிந்தது எனக் கேட்க , அதற்கு எம்பெருமானார் தாம் ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் போன்றவர் என்று சொன்னார் (துரோணாசார்யாரை நேரில் சந்தித்து கற்றுக் கொள்ளாமல் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொண்டவன் ஏகலவ்யன்). எம்பெருமானாரின் பெருமைகளை உணர்ந்த ஆண்டான் அவரை வணங்கி தாம் ஆளவந்தாரிடமிருந்து கேட்காமல் இழந்ததை எம்பெருமானாரிடமிருந்து அறிந்து கொண்டதை எண்ணி மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்.

ஆண்டானுக்கும் எம்பெருமானாருக்கும் இடையே ஏற்பட்ட பல முக்கிய சுவாரஸ்யமான/வித்யாசமான குறிப்புகளை நாம் வ்யாக்யானங்களிலிருந்து காண முடிகிறது. அவற்றுள் சில:

  • திருவாய்மொழி 1 .2 – நம்பிள்ளை வ்யாக்யானம் : “வீடு மின் முற்றவும்”  பதிகம் முன்னுரை – இந்தப் பதிகத்தின் காலக்ஷேபத்தின் போது தாம் ஆளவந்தாரிடம்  கேட்டதுபோல, எம்பெருமானாருக்கு ப்ரபத்தி (சரணாகதி) யோகத்தைப் பற்றி விளக்கினார்.  அதையே எம்பெருமானாரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் அவர் ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்தவுடன் இந்தக் கருத்தை மாற்றி இந்தப் பதிகம் பக்தி யோகத்தைப் பற்றி விளக்குவதாகக் கூறினார். ஏனெனில் ப்ரபத்தி என்பது மிகவும் ரஹஸ்யமானது என்றும் சுலபமாக விபரீத அர்த்தம் பண்ணைக் கூடியது என்றும் கூறினார். எம்பெருமானார் இதை  ஸாத்ய  பக்தியாக விளக்கினார் (என்னுடைய முயற்சியால் நான் இந்த பக்தியைப் பண்ணுகிறேன் என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லாமல் எம்பெருமானின் சந்தோஷத்திற்காக மட்டுமே இந்த பக்தியை ஆத்மார்த்தமாகப்  பண்ணுவது). இந்த  ஸாத்ய  பக்தி என்பது உபாய/ஸாதன பக்தியிலிருந்து வேறு பட்டது ஆகும் (பொதுவாக பக்தி யோகம் என்றே குறிப்பிடப்படுகிறது). எம்பாரும் எம்பெருமானாரைப் பின்பற்றி இவ்வாறே விளக்குகிறார்.
  • திருவாய்மொழி 2 .3 .1 – நம்பிள்ளை வ்யாக்யானம் – “தேனும் பாலும் கன்னலும்  அமுதுமொத்தே – கலந்தொழிந்தோம்” என்ற பாசுரத்தை விளக்கும் போது தாம் ஆளவந்தாரிடம் கேட்டபடி, ஆழ்வார் , எம்பெருமானும் தாமும் இயற்கையாக தேனும் தேனும், பாலும் பாலும், கலப்பது போலக் கலந்தோம் என்று கூறுவதாக விளக்கினார். ஆனால் எம்பெருமானார் அதற்கு ஆழ்வார், எம்பெருமானும் தாமும், தேன் பால் கற்கண்டு  போன்ற சுவையான பதார்தங்களைக் கலந்தால் கிடைக்கும் அமுதமான சுவையை  கலந்து அனுபவித்ததாக விளக்கினார்.
  • நாச்சியார்  திருமொழி  1 .1 .6 – வ்யாக்யானம் – ஆண்டானுடைய ஆசார்ய பக்தியைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். ஆண்டான் வழக்கமாகக் கூறுவாராம்: நாம் இந்த உடம்பையும் அது சார்ந்தவைகள் மீதுள்ள பற்றையும் விட்டொழிக்கவேண்டும் என்றாலும் இந்த உடலை புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில் இந்த உடலால் தான் நான்  ஆளவந்தாரின் சம்பந்தம் கிடைக்கப் பெற்றேன் என்பாராம்.

சரமோபாய நிர்ணயத்தில் (எம்பெருமானாரின் பெருமைகளை பற்றிச் சொல்லும் க்ரந்தம்) திருமாலை ஆண்டான் பொலிக பொலிக பாசுரத்தின் (திருவாய்மொழி 5.2) அர்த்தங்களை காலக்ஷேபம் பண்ணிக்கொண்டிருக்கும்போது “திருக்கோஷ்டியூர் நம்பி அந்த கோஷ்டியினரைப் பார்த்து, இந்த பாசுரத்தால் குறிக்கப்படுபவர் எம்பெருமானாரே” என்று கூறியதாக நாயனார் ஆச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். இதைக் கேட்ட ஆண்டானும் மிகவும் களிப்புற்று இனித் தாம் எம்பெருமானாரையே ஆளவந்தாராகக் (அவருடைய ஆசார்யன்) கருத்தப்போவதாகக் கூறினார். இந்த விஷயம் http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-ramanujars-acharyas.html என்ற வலைத்தளத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆளவந்தார் மற்றும் எம்பெருமானாரிடத்தில் மிகவும் பற்றுயுடைய  திருமாலைலை ஆண்டானின் திருவடித்தாமரைகளை ஆச்ரயிப்போம் !!

திருமாலை ஆண்டான்  தனியன்

ராமாநுஜ முநீந்த்ராய  த்ராமிடீ  ஸம்ஹிதார்த்தம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம்  விபஸ்சிதம் ||

அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/02/24/thirumalai-andan-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org